ஆப்நகரம்

நடிகை அஞ்சலியை அழ வைத்த சமுத்திரக்கனி!

படப்பிடிப்பின் போது இயக்குனர் சமுத்திரக்கனியின் டயலாக்கைப் பேசிய நடிகை அஞ்சலி கண்கலங்கி விட்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 18 May 2018, 3:18 pm
படப்பிடிப்பின் போது இயக்குனர் சமுத்திரக்கனியின் டயலாக்கைப் பேசிய நடிகை அஞ்சலி கண்கலங்கி விட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil sasikumar-nadodigal-2


‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் அவர் ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் பல படங்களில் ஹீரோயினியாக நடித்து வந்தார். இடையில் சில படங்களில் குத்தாட்டமும் ஆடினார். இடையில் குடும்பப் பிரச்னையில் சிக்கித் நடிக்காமல் சிறிது காலம் இருந்தார்.

தற்போது நடிகை அஞ்சலி ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சமுத்திரக்கனி இயக்கிவருகிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.

சமீபத்தில் நடிகை அஞ்சலிக்கு மிக சென்டிமெண்டான ஒரு சீன் கொடுத்து நடிக்கவைத்துள்ளார் சமுத்திரக்கனி. அது பற்றி நடிகை அஞ்சலி சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். “என் சினிமா கேரியரில் சிறந்த சீன் இதுதான். இதை எழுதி அதற்கு உயிர் கொடுத்த இயக்குனர் சமுத்திரக்கனிக்கு நன்றி. இதனால் ஆனந்த கண்ணீர் வருகிறது” என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்