ஆப்நகரம்

கல்யாணத்துக்கு நான் ரெடி: ஆனால், பெற்றோர் பார்க்கும் பொண்ணு தான்! ஆதி

நான் அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.

TNN 23 Jun 2017, 9:12 pm
நான் அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i am waiting for marriage says aadhi
கல்யாணத்துக்கு நான் ரெடி: ஆனால், பெற்றோர் பார்க்கும் பொண்ணு தான்! ஆதி


ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, மைம் கோபி, ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் மரகத நாணயம். கடந்த 16ம் தேதி வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் தொடர்பாக ஆதி கூறுகையில், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சிதான். படத்தைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. இது போன்ற கதையுள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

அடுத்து அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். மேலும், தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் ராம்சரணுடன் ரங்கஸ்தளம் 1985 என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது அண்ணன் தம்பி கதை. இதில், நான் ராம்சரணுக்கு அண்ணனாக நடிக்கிறேன். நானியுடனும், நின்னு கோரி என்ற படத்திலும் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு எனது பெற்றோர்கள் பெண் தேடுகிறார்கள். அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்