ஆப்நகரம்

நான் தான் 2021ல் முதலமைச்சர்: மீரா மிதுனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நான் அடுத்து CM ஆவேன் என ட்விட் செய்துள்ள மீரா மிதுனை நெட்டிசன்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Apr 2020, 2:32 pm
தமிழசினிமா துறையில் சென்ற வருடம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை மீரா மிதுன். 2016ல் மிஸ் சவுத் இந்தியா படம் வென்ற அவர் அதன்பிறகு சில மோசடி செயல்களில் ஈடுபட்டார் என்று அவரது பட்டம் பறிக்கப்பட்டது என தகவல் வெளியானது.
Samayam Tamil Meera Mithun says she will surely become CM in 2021


அதன் பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்ற அவர் அங்கும் சர்ச்சைகளில் சிக்கினார். அபிராமி, சாக்ஷி உடன் சண்டை, சேரன் தன்னிடம் தவறான நடந்ததாக போலியாக குற்றம்சாட்டியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் சமூக வலைத்தளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மீரா மிதுனின் சில போன் உரையாடல் ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.

அதற்கு பிறகு Anti-corruption committeeயில் மாநில இயக்குனராக பணியாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் மீரா அறிவித்தார். அதன் பிறகு அதில் இருந்தும் நீக்கப்பட்டார் என செய்திகள் வந்தது.

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வரும் அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் எதாவது ஹாட்டான புகைப்படங்கள் வெளியிட்டால் அதற்கு வரும் கமெண்டுகள் மிகவும் மோசமாகவே இருக்கும்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் 'நான் தான் 2021ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன்' என பதிவிட்டுள்ளார். "நான் எப்போதும் ஊழலுக்கு எதிராக இருக்கிறேன். ஊழல் இல்லாத தமிழகத்தை என்னால் உருவாக்க முடியும். 2021ல் நான் முதலமைச்சர் ஆவது உறுதி" என ட்விட் செய்துள்ளார்.


இதற்கு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். என்ன கூறியுள்ளனர் என நீங்களே பாருங்கள்..




அடுத்த செய்தி

டிரெண்டிங்