ஆப்நகரம்

ஓபிஎஸ்க்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது

TNN 16 Feb 2017, 1:08 am
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையில் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தோல்வி பயத்தில் இருக்கும் சசிகலா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தின் அரசியல் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்பட, 12 எம்.பிக்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.
Samayam Tamil i did not support to opanneerselvam says raghava lawrence
ஓபிஎஸ்க்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை: ராகவா லாரன்ஸ்


மேலும், திரை பிரபலங்களான உலகநாயகன் கமலஹாசன், இயக்குனர் பாலா, கங்கை அமரன், சரத்குமார், ராமராஜன், தியாகு உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த நடிகர் ராகவா லாரன்ஸூம் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதன் காரணமாக அவர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், நான் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி தெரிவிக்கவே அவரை சந்திக்க சென்றேன். மேலும், வரும் 18ம் தேதி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடும் விதமாக 1000 கிலோ கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்த இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

I did not support to OPanneerselvam says raghava lawrence

அடுத்த செய்தி

டிரெண்டிங்