ஆப்நகரம்

அந்த விஷயத்தில் மட்டும் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன்: ராஷி கன்னா

சம்பளம் பற்றி ராஷி கன்னா கூறியிருப்பதை கேட்ட அனைவரும் வியக்கிறார்கள்.

Samayam Tamil 20 Aug 2020, 3:23 pm
ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கஃபே படம் மூலம் நடிகையானவர் ராஷி கன்னா. அவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த ராஷி கன்னா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
Samayam Tamil raashi khanna


தன் முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ராஷி கன்னா அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த அருவா படத்தில் நடிப்பதாக ராஷி கன்னா தெரிவித்தார். இந்நிலையில் அருவா படம் கைவிடப் பட்டது என்று செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அருவா கைவிடப்படவில்லை, சூர்யாவுக்கு பதில் ஹரியின் மைத்துனரான அருண் விஜய் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அருவா படத்தில் ராஷி கன்னா நடிக்கிறாரா இல்லையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

அருவா படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யா?

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ராஷி கன்னா கூறியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில் ராஷி கன்னா கூறியிருப்பதாவது,

நான் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். எனக்கு கதையும், கதபாத்திரமும் தான் முக்கியம். படத்தின் கதை நன்றாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயங்க மாட்டேன். அதே சமயம் கதை நன்றாக இல்லை என்றால் எவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தாலும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்.

நல்ல கதையை தேர்வு செய்து நடித்தாலும் படம் தோல்வி அடைகின்றதே என்று நீங்கள் கேட்கலாம். படத்தின் கதையை கேட்கும் போது அருமையாக இருக்கும். ஆனால் சில நேரம் படத்தை திரையில் பார்க்கும் போது அந்த கதை தான் இந்த கதையா என்று கேட்கும் அளவுக்கு மாறியிருக்கும். ஒரு படம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் நம் கையில் இல்லை. கதை விஷயத்தில் மட்டும் காம்பிரமைஸ் பண்ண மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஷி கன்னா வீட்டில் முடங்கியிருக்கிறார். மற்ற பிரபலங்களை போன்று ராஷி கன்னாவும் சமூக வலைதளங்களில் பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறார்.

ராஷி கன்னா ஏற்கனவே ஹீரோக்களின் மனம் கவர்ந்த நடிகையாகிவிட்டார். செட்டில் பந்தா பண்ணுவது இல்லை, சேட்டை செய்வது இல்லை. சமத்தாக இருந்து நடித்துக் கொடுப்பதால் ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகையாகியுள்ளார்.

கதை நன்றாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளத் தயார் என்று ராஷி கூறியிருப்பதை பார்த்து நிச்சயம் பல இயக்குநர்கள் அவரை அணுகுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்