ஆப்நகரம்

இனிமேல் படம் தயாரிக்க மாட்டேன்: பிரபு சாலமன்

பிரபல இயக்குனர் ஒருவர் இனிமேல் நான் படம் தயாரிக்கப்போவதில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

TNN 27 Oct 2016, 1:14 pm
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பிரபு சாலமன் கண்ணோடு காண்பதெல்லாம், உசிரே, கிங், கொக்கி, லீ, லாடம், மைனா, கும்கி, கயல், தொடரி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராகவும் அல்லாமல் சில படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் இருந்திருக்கிறார்.
Samayam Tamil i dont produce no film in future prabhu solomon
இனிமேல் படம் தயாரிக்க மாட்டேன்: பிரபு சாலமன்


இந்நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வந்த தொடரி படத்திற்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இவரது தயாரிப்பில் சந்திரன், கயல் ஆனந்தி, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில் வந்த ரூபாய் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபு சாலமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், நான் தயாரித்த சாட்டை படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமம் மட்டும் ரூ.1.25 கோடிக்கு போனது. ஆனால், இந்த ரூபாய் படம் அப்படியே நிற்கின்றது. இனிமேல், என்னுடைய தயாரிப்பில் எந்த படமும் வெளிவராது என்று கூறிய அவர், இப்போது நிலைமை அப்படி மோசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்