ஆப்நகரம்

நான் நடிச்ச படங்களை நானே பார்க்க மாட்டேன்: என்ன கீர்த்தி சுரேஷ் இப்படி சொல்லிட்டாங்க.!

ஒரு நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Samayam Tamil 4 Jun 2022, 7:18 am
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய படங்களை தானே பார்க்க மாட்டேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Keerthy Suresh
Keerthy Suresh


கீரத்தி சுரேஷ் செல்வராகவன் கதாநாயகனாக அறிமுகமாகும் சாணிக்காயிதம் படத்தில் நடித்திருந்தார் . தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குநராகவும், இறுதிச்சுற்று படத்தின் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.

ஓடிடி வெளியீடாக அண்மையில் ரிலீஸ் ஆன இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பலரும் பாராட்டினர். அதனை தொடர்ந்து மகேஷ் பாபு ஜோடியாக நடித்த ‘சர்காரு வாரி பட்டா’ படம் வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "என்னுடைய நடிப்பு எப்போதுமே எனக்கு திருப்தியை கொடுத்ததில்லை. நடிப்பின் மீது எனக்கு உள்ள ஈடுபாடு காரணமாக இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கு முன்பும் நினைத்துக் கொள்வேன். நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதேபோல வணிக ரீதியாக அந்த படங்கள் வெற்றியடைய வேண்டும்.

அப்போதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான திருப்தி கிடைக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் எனக்குள் உள்ள நடிகையை வெளியே கொண்டு வந்து ரசிகர்களுக்கு காட்ட முடியும். நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்''. இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்