ஆப்நகரம்

அஜீத்தால்தான் எனக்கு விஜய்யின் ‘பைரவா’ பட வாய்ப்பு கிடைத்தது: இயக்குனர் பரதன்!

தல அஜீத்தால்தான், விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பிரபல இயக்குனர் பரதன் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2018, 3:10 pm
தல அஜீத்தால்தான், விஜய்யை வைத்து ‘பைரவா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பிரபல இயக்குனர் பரதன் கூறியுள்ளார்.
Samayam Tamil ajith-vijay-bharathan


தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் விஜய், அஜீத். நடிகர் விஜய், முன்னணி இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு தந்து வருகிறார். ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதனுக்கு பல வருடங்களுக்கு பிறகு ‘பைரவா’ படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்தார் நடிகர் விஜய்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பின் இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து இயக்குனர் பரதன் ஒரு பேட்டியில் கூறினார். “‘வீரம்’ படத்தில் அஜீத் மற்றும் சிவாவுடன் இணைந்து வசனகர்த்தாவாக பணியாற்றினேன். இந்த படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ‘வீரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதை வைத்துத்தான் நடிகர் விஜய், ‘பைரவா’ படத்தை இயக்கும் வாய்ப்பைத் தந்தார்’’ என்றார் இயக்குனர் பரதன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்