ஆப்நகரம்

எதிர்ப்புகளை கடந்து சினிமாவுக்குள் நுழைந்தேன்: ஸ்வேதா கய்!

பல்வேறு எதிர்ப்புகளை கடந்து சினிமாவுக்குள் நுழைந்தேன் என்று நடிகை ஸ்வேதா கய் கூறியுள்ளார்.

TOI Contributor 24 Apr 2017, 1:21 pm
பல்வேறு எதிர்ப்புகளை கடந்து சினிமாவுக்குள் நுழைந்தேன் என்று நடிகை ஸ்வேதா கய் கூறியுள்ளார்.
Samayam Tamil i have entered into the film crossing all the oppose says shweta gai
எதிர்ப்புகளை கடந்து சினிமாவுக்குள் நுழைந்தேன்: ஸ்வேதா கய்!


புதிய இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள படம் ‘தப்புதண்டா’ படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஸ்வேதா கய். இந்தப் படத்தின் நாயகனாக சத்யா நடித்துள்ளார். ‘இது என்ன மாயம்’ படத்தில் ஸ்வேதா கய் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் பற்றி நடிகை ஸ்வேதா கூறுகையில், ‘’என் பெயர் ஸ்வேதா. ஒரு தமிழ் பெண். என் பெயருக்கு பின்னால் கய் என்ற எழுத்தைச் சேர்த்துள்ளேன். எனது பெயருக்குப்பின்னால், எனது அம்மா காயத்திரியின் முதல் இரண்டு எழுத்தை சேர்த்து ஸ்வேதா கய் என்று வைத்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்து விடவில்லை. இந்த படத்தின் நாயகி தேர்வுக்கு 60 பெண்கள் வந்து இருந்தனர். பல கோணங்களில் நடித்துக்காட்ட சொன்னார்கள். நீண்ட வசனத்தை கொடுத்து பேச சொன்னார்கள்.

இதில், எல்லாம் ‘ஓகே’ ஆனபிறகு, நான் ஒல்லியாக இருப்பதாக சொன்னார்கள். இதனால் நான் செலக்ட் ஆவேனா என்று பயந்து கொண்டே இருந்தேன். பல எதிர்ப்புகளை கடந்த பிறகுதான் இதில் நடிக்க தேர்வு ஆனேன். அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தில் என் கேரக்டரை உணர்ந்து நடித்து இருக்கிறேன். நிச்சயம் இந்த படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.

I have entered into the film crossing all the oppose says shweta gai

அடுத்த செய்தி

டிரெண்டிங்