ஆப்நகரம்

அஜித் - ஷாலினி காதலுக்கு பாலமாக இருந்தேன்: ஷாமிலி!

அஜீத் - ஷாலினி காதலுக்கு நான்தான் அதிகமாக உதவினேன் என்று நடிகை ஷாமிலி கூறியுள்ளார்.

Samayam Tamil 31 May 2018, 1:39 pm
அஜீத் - ஷாலினி காதலுக்கு நான்தான் அதிகமாக உதவினேன் என்று நடிகை ஷாமிலி கூறியுள்ளார்.
Samayam Tamil ajith shalini shamil


சினிமா நட்சத்திரங்களில் பலபேர் தங்களுடன் நடிக்கும் நடிகை, நடிகர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்படியாக செய்து கொண்வர்கள்தான் நடிகை அஜீத்தும், நடிகை ஷாலினியும். நட்சத்திர ஜோடி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அஜீத் - ஷாலினி ஜோடிதான். இவர்களுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிறது. இதுநாள் வரை இவர்களின் சொந்த விஷயங்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி அளித்த பேட்டி ஒன்றில், அஜீத் - ஷாலினி காதல் திருமணம் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர், ‘‘அவர்கள் இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். மாமா அஜீத் கொடுக்கும் பூக்களை யாருக்கும் தெரியாமல் நான்தான் அக்கா ஷாலினியிடம் கொடுப்பேன்.

இதுபோல் அவர்களுடைய காதலுக்கு நான்தான் பக்கபலமாக இருந்தேன். அஜீத், அவர் மனைவி ஷாலினிக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதுவே அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு காரணம்’’ என்றார் நடிகை ஷாம்லி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்