ஆப்நகரம்

கடைசி வரை நான் பெற்றோருடனேயே இருக்க விரும்புகிறேன்: சாய் பல்லவி!

எனக்கு திருமணம் எல்லாம் வேண்டாம்; கடைசி வரை நான் பெற்றோருடனே இருக்க விரும்புகிறேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்

Samayam Tamil 14 Feb 2019, 11:31 am
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடலின் மூலம் இவர் மக்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.. மேலும் இந்தப் பாடல் யுடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.
Samayam Tamil sai-pallvi


இந்நிலையில், சாய் பல்லவி தனது திருமணம் பற்றி, ‘‘திருமணத்துக்கு இப்ப என்ன அவசரம். தான் பெற்றோருடன் இருக்கவே விரும்புவதாகவும், திருமணம் பெற்றோருக்கு செய்யும் கடமைகளை தடுத்து விடும் என்றும், இதற்காக தான் திருமணத்தை தவிர்ப்பதாகவும்’’ கூறியுள்ளார் சாய் பல்லவி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்