ஆப்நகரம்

கல்லூரியில் நாமும் படித்திருக்கலாம் என்று நினைத்து கண்கலங்கிய நடிகர் யோகிபாபு

கல்லூரியில் நடந்த படப்பிடிப்பின் போது காமெடி நடிகர் யோகி பாபு, நாமும் கல்லூரியில் படித்திருக்கலாம் என்று கண்கலங்கிய படி கூறினாராம்.

Samayam Tamil 18 Sep 2018, 4:16 pm
கல்லூரியில் நடந்த படப்பிடிப்பின் போது காமெடி நடிகர் யோகி பாபு, நாமும் கல்லூரியில் படித்திருக்கலாம் என்று கண்கலங்கிய படி கூறினாராம்.
Samayam Tamil Yogi-Babu


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் காமெடி நடிகராக எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது யோகி பாபு, ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தில் சட்டக்கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்த யோகி பாபு, தனது அனுபவம் பற்றி கூறுகையில், ” நான் 10ம் வகுப்புவரைதான் படித்துள்ளேன். இந்தப் படத்தில் நான் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

நாமும் இதே மாதிரி கல்லூரியில் படித்திருக்கலாமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. இந்தப் படத்தில் நான் காமெடி காட்சிகளில் மட்டுமின்றி உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.நடித்து முடித்து மானிட்டரில் பார்க்கும்போது, இந்த மாதிரியான காட்சிகளில் எனக்கும் நடிக்க வருகிறதே என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொள்veன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்