ஆப்நகரம்

அதுக்கு மட்டும் தான் எனக்கு ஆண் தேவை:பிரியங்கா!

குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண் துணை தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 16 Jan 2017, 6:43 pm
குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் எனக்கு ஆண்தேவை என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i need life partner only to deliever a baby says priyanka chopra
அதுக்கு மட்டும் தான் எனக்கு ஆண் தேவை:பிரியங்கா!


பாலிவுட் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் படம் ஒன்றுக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. பாலிவிட் மட்டுமில்லாமல் உலகளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. அதனால் இவரது படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவிப்பது வழக்கம்.

இதனால் 34 வயதான போதும் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார் பிரியங்கா. இந்நிலையில் தனது திருமணம் குறித்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் தனக்கு ஆண் துணை தேவை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா கூறியது:
சொந்த காலில் சுதந்திரமாக நான் இருக்கிறேன். எதுக்கும் பயப்படவே மாட்டேன். ஆண்களால் என்னை தோற்கடிக்க முடியாது. குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஒரு ஆண் துணை தேவை. அதை தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது.

அதற்காக மட்டும் ஒரு ஆண் துணையை தேர்ந்தெடுப்பேன். ஆனால் அவரும் என்னைப் போலவே யோசிப்பவராக இருக்க வேண்டும். தவிர, உண்மையாக என்னை விரும்புபவராகவும் இருக்க வேண்டும். எனக்கு துரோகம் செய்தால் பொருத்துக்கொள்ள மாட்டேன். அவரை ஒரு கை பார்த்துவிடுவேன்.

திருமணத்தில் நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு பெண்ணுக்கு உற்சாகம் என்பது மிகப்பெரிய பலம். எனது நண்பர்கள் எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இதனால் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்