ஆப்நகரம்

கணவரிடம் அந்த விஷயத்தை மட்டும் பேசவே மாட்டேன்: சமந்தா!

‘’நான் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து எனது கணவரிடம் எப்போதும் விவாதிக்க மாட்டேன். கருத்தும் கேட்க மாட்டேன்’’ என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Apr 2018, 4:51 pm
‘’நான் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து எனது கணவரிடம் எப்போதும் விவாதிக்க மாட்டேன். கருத்தும் கேட்க மாட்டேன்’’ என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i never discussed with my husband about my films says samantha
கணவரிடம் அந்த விஷயத்தை மட்டும் பேசவே மாட்டேன்: சமந்தா!


நடிகை சமந்தா, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில்நாக சைதன்யாவுடன்இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் இருவரும் நடித்த போதுஇவர்களுக்கிடையில் காதல் மலர்ந்தது. இந்தக் காதல், கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. இருவருமே நடிகர்கள் என்பதால், ஒருவர் படங்களைப் பற்றி மற்றொருவரிடம் விவாதிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து நடிகை சமந்தாவிடம் கேட்டதற்கு, “நான் நடிக்கும் படங்கள் பற்றி என் கணவரிடம் ஆலோசிக்க மாட்டேன். அவ்வளவு ஏன், இயக்குனர்களிடம் நான் கேட்ட கதைகளைக்கூட அவரிடம் சொல்லி, ‘இந்தப் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்ற கருத்துக்கூட கேட்கமாட்டேன். ஒரு நடிகையாக எந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன். அவரும் அப்படித்தான். என்னுடைய தொழில் விஷயத்தில் தலையிடமாட்டார்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்