ஆப்நகரம்

“சினிமாவை விட்டு விலக தயார்” : கடுப்பான சிம்பு!

படப்பிடிப்பு தாமதமாக நான் தான் காரணம் என்று ஒரு இயக்குநர் சொல்லட்டும், நான் சினிமாவை விட்டே விலகிவிடுகிறேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

TOI Contributor 28 Jun 2017, 4:12 pm
படப்பிடிப்பு தாமதமாக நான் தான் காரணம் என்று ஒரு இயக்குநர் சொல்லட்டும், நான் சினிமாவை விட்டே விலகிவிடுகிறேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
Samayam Tamil i ready to quit cinema says actor simbu
“சினிமாவை விட்டு விலக தயார்” : கடுப்பான சிம்பு!


நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த வாரம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியாகியது. ஆனால் படத்தை பார்த்த பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சிம்பு ரசிகர்களே படத்தை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

படம் சரியாக ஓடாதது ஒரு புறம் இருக்க, சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வருவதே இல்லை. சரியாக வந்தாலே படத்தின் அவுட்புட் நன்றாக வரும் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்புக்கு தமாதமாக வருவது குறித்து நடிகர் சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இயக்குநர் எதிர்பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்தும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். அப்படி இல்லாத பட்சத்தில் நடிக்கும் மனநிலைக்கு வந்த பின்னரே வீட்டை விட்டு கிளம்புவேன். அதனால் அதுகுறித்து யார் குறை சொன்னாலும் கவலை இல்லை.

ஆனால் சிம்பு ஒரு காட்சிக்கு 20, 25 டேக் வாங்கினார் என்று எந்த இயக்குநரையாவது சொல்ல சொல்லுங்கள். அப்படி சொன்னார்கள் என்றால் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் என்று சிம்பு கூறியுள்ளார். சினிமாவில் நடிக்கும் ஆசை போய்விட்டது. என் ரசிகர்களுக்காக மட்டும் தான் நடித்துவருகிறேன் என்று ஏற்கனவே சிம்பு கூறியிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்