ஆப்நகரம்

காவிரி விவகாரத்தில் இது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வு : ரஜினிகாந்த்!

காவிரி விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாமான தீர்வாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 1:19 pm
சென்னை: காவிரி விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாமான தீர்வாக இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 11


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காவிரி நீரை ஒழுங்குப்படுத்த ஸ்கீம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலைமாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

I sincerely hope justice will prevail.says rajini

அடுத்த செய்தி

டிரெண்டிங்