ஆப்நகரம்

நான் நம்பியவங்களே ஏமாத்திட்டாங்க: அமலா பால் வேதனை

நான் சிலரை நம்பினேன். ஆனால் அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்று நினைக்கவில்லை என நடிகையும், தயாரிப்பாளருமான அமலா பால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Oct 2021, 10:28 am
தான் நம்பியவர்களே தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அமலா பால் கூறியிருக்கிறார்.
Samayam Tamil i trusted some and they betrayed me amala paul
நான் நம்பியவங்களே ஏமாத்திட்டாங்க: அமலா பால் வேதனை


அமலா பால்

நடிகையாக தமிழ் திரையுலகிற்கு வந்த அமலா பால் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அமலா பால் ப்ரொடக்ஷன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். அவர் தயாரித்திருக்கும் முதல் படம் கடாவர். தான் தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருப்பது குறித்து அமலா பால் ட்வீட் செய்துள்ளார்.

Twitter-Amala Paul ⭐️

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது குறித்து அமலா பால் கூறியிருப்பதாவது, ஒரு தயாரிப்பாளராக நான் நிறைய கற்றுக் கொண்டேன். படம் தயாரித்தபோது நிறைய விஷயங்கள் நடந்தது. அதன் மூலம் மக்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு நடிகையாக தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்றார்.

ஏமாற்றம்

நான் சிலரை மிகவும் நம்பினேன். ஆனால் அவர்களே என்னை ஏமாற்றுவார்கள் என்று தெரியாமல் போய்விட்டது. நான் சில பாடங்களை கடினமான வழியில் கற்றுக் கொண்டேன். தற்போது மக்களை பற்றி எனக்கு நிறைய தெரியும். இது எல்லாம் வாழ்க்கைப் பாடம் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

படங்கள்

நான் வாழ்க்கையை அதன் வழியில் வாழ்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எந்திரம் போன்று உழைத்தேன். 17-18 வயதில் இருந்து உழைக்கிறேன். ஆனால் அந்த வயதில் என்ஜாய் பண்ண வேண்டியதை மிஸ் செய்துவிட்டேன். நான் தற்போது யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை. அதனால் என்னை இன்ஸ்பையர் செய்யும் படங்களாக தேர்வு செய்கிறேன் என்கிறார் அமலா பால்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்