ஆப்நகரம்

போட்டோ எடுத்த காஷ்மீர் ரசிகை, விளாசிய கணவன், உருகிய பிரகாஷ் ராஜ்!

குடும்பத்தோடு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் மனம் வருந்தியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

Samayam Tamil 18 Jun 2019, 12:36 pm
பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருபவர். பாஜக அரசையும், மோடியையும் பல நேரங்களில் விமர்சித்து வருகிறார். மேலும் கடந்த நாடளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் தொடர்ச்சியாக நான் மக்களுக்கு குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
Samayam Tamil raj


அவர் சமீபத்தில் தன் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா போயிருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வருத்தததுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். பிரகாஷ்ராஜ் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒருவிடுதியில் தங்கியிருந்துள்ளார். அங்கே திடீரென பிரகாஷ்ராஜை ஓட்டலில் பார்த்த ஒரு ரசிகை ஓடிவந்து, "சார்.. உங்களோட ஒரே ஒரு செல்பி எடுத்துக்கறேன்" என்று அனுமதி கேட்டுள்ளார். அதற்கு ஓகே சொன்ன பிரகாஷ்ராஜ், அந்த பெண்ணுடனும், அவருடைய மகளுடனும் சேர்ந்து செல்பியும் எடுத்து கொண்டார்.

நேர் கொண்ட பார்வை யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

இதற்கு பிறகு நடந்த விஷயம் தான் அவரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரகாஷ்ராஜூடன் போட்டோ எடுத்ததை பார்த்த பெண்ணின் கணவன். பிரகாஷ்ராஜ் தொடர்ச்சியாக மோடியை விமர்சிப்பதால் கோபமாகி பிரகாஷ் ராஜூடன் செல்பி எடுத்தது தவறு என்று சண்டை போட்டுள்ளார். எல்லார் முன்னிலையிலும் தன் கணவன் திட்ட சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க, இதனால் அவமானம் அடைந்த மனைவியும், மகளும் அங்கேயே அழ ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவும், பிரகாஷ்ராஜ் முன்னாடியே நடந்ததால் பெரும் வருத்தமடைந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

விஷால் ஒரு கிரிமினல் அரசியல்வாதி - சேரன் விமர்சனம்!!


பிரகாஷ்ராஜ் அவமானத்தில் அந்தப்பெண் துடிப்பதை புரிந்து கொண்டு, பெண்ணின் கணவரை தனியே அழைத்து பேசியுள்ளார். ''சார் எனக்காகவோ, மோடிக்காகவோ உங்கள் மனைவி உங்களை திருமணம் செய்துக்கல...இத்தனை அழகான பெண்களை பெற்று தரல!

விஜய்க்கு நடனம் சொல்லித் தர ஆசைப்பட்டு ஏமாந்து போன நடிகை!

அவர்கள் உங்களை உளமாற நேசிக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கும், பார்வைகளுக்கும் கொஞ்சம் மரியாதை தாருங்கள். உங்கள் சுற்றுலாவை சந்தோஷமாக கொண்டாடுங்கள் எனக் கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த சம்பவத்தை மறக்க முடியாத பிரகாஷ்ராஜ், ட்விட்டரில் இதனைப் பகிர்ந்து அவர் என் போட்டொவை அழித்திருக்கலாம் அல்லது அழிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த பெண்களின் காயத்தை ஆற்றியிருப்பாரா? இல்லையா? என்ற கேள்வியோடு வருத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்