ஆப்நகரம்

மொழி தெரியாததால் பலநாடுகளில் அவதிப்பட்ட நடிகர் பாக்யராஜ்!

நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ், பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள மொழி தெரியாமல் அவதிப்பட்டதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Oct 2018, 3:50 pm
நடிகர் பாக்யராஜ், சமீபத்தில் ‘ஔடதம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசுகையில், ‘‘படக்குழுவினர் ‘தமிழா தமிழில் கையெழுத்திடு’ இயக்கத்தை தொடங்கி உள்ளனர். தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன்.
Samayam Tamil bhagyaraj


நான் சீனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். அங்கு போயிருந்த எனக்கு தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது.

அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டி இருந்தது. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள். சில நாடுகளில் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன’’ என்றார் பாக்யராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்