ஆப்நகரம்

ரொம்ப ஒசரமா, கருப்பா இருக்கீங்கனு பாலிவுட்டில் சொன்னாங்க: சமீரா ரெட்டி

தான் உயரமாக, கருப்பாக இருப்பதாக பாலிவுட்காரர்கள் அடிக்கடி கூறியதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Aug 2020, 8:35 am
மேனே தில் துஜ்கோ தியா இந்தி படம் மூலம் நடிகையானவர் சமீரா ரெட்டி. சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அசல், வெடி, வேட்டை, நடிநிசி நாய்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அக்ஷய் வர்தே எனும் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சமீரா. அவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
Samayam Tamil sameera reddy


இந்நிலையில் பாலிவுட்டில் நடித்த அனுபவம் குறித்து சமீரா ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சமீரா கூறியதாவது,

நீங்கள் ரொம்ப கருப்பாக, உயரமாக இருக்கிறீர்கள் என்று அடிக்கடி என்னிடம் கூறினார்கள். பக்கத்து வீட்டு பெண் போன்ற லுக்கிற்கு நீங்கள் செட்டாக மாட்டீர்கள் என்றார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டு எனக்கு என் மீதான அன்பு கூடியது.

இது பிரித்துப் பார்ப்பது இல்லை. நடிகையாக இருந்தால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமானபோது #ImperfectlyPerfect என்கிற பிரச்சாரத்தை துவங்கினார். குண்டாக இருப்பதில் பிரச்சனை இல்லை, நம்மை நாமே நேசிப்பது மிகவும் முக்கியம் என்றார்.

இது குறித்து சமீரா கூறியதாவது,

நான் முதல் முறை கர்ப்பமான போது வெயிட் போட்டு 105 கிலோ ஆனேன். அதன் பிறகு என் தன்னம்பிக்கை போய்விட்டது. என் சினிமா கெரியருக்காக நான் சிக்கென்று வைத்திருந்த உடல், அழகான முகம் மாறிய பிறகு எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த அனுபவத்தால் தான் #ImperfectlyPerfect பிரச்சாரத்தை துவங்கினேன் என்றார்.

முதல் முறை கர்ப்பமானபோதே சமீராவுக்கு சிக்கலாக இருந்திருக்கிறது. மேலும் குழந்தை பிறந்த பிறகு சமீரா குண்டாகிவிட்டார். வெளியே சென்றால் அவரை யாராவது அடையாளம் கண்டுகொண்டால் சமீரா ரெட்டியா இது என்று அவர் முன்பே பேசியிருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து வருத்தப்பட்ட சமீரா தன் உடல் எடையை குறைக்க தீர்மானித்தார்.

அதன் பிறகு அவருக்கு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை ஏற்படவே அதை தன் கணவரிடம் கூறியிருக்கிறார். கணவரோ, முதல் பிரசவமே பிரச்சனையாக இருந்ததே, இரண்டாவது குழந்தை கண்டிப்பாக வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். சமீரவோ, கண்டிப்பாக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தபோது சமீரா ரெட்டி நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின. கர்ப்பமானால் குண்டாவதால் வெட்கப்படத் தேவையில்லை. குழந்தை பிறந்த பிறகு குண்டாக இருப்பதிலும் தவறு இல்லை. அதன் பிறகு கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும் என்று பல பெண்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார் சமீரா ரெட்டி.

மாஸ் பேபி! சூப்பர்ஸ்டார் ரஜினி ஸ்டைலில் கலக்கும் பிரபல நடிகையின் மகள் வீடியோ

அடுத்த செய்தி

டிரெண்டிங்