ஆப்நகரம்

நான் ‘அந்த மாதிரி’ படங்களை எடுக்கப் போகிறேன்: வேதனையுடன் பிரபல இயக்குனர்!

இளைஞர்களை கவரும் ‘அந்த மாதிரியான’ படங்களை எடுக்கப் போகிறேன் என்று பிரபல இயக்குனர் அசோக் மன வேதனையுடன் கூறியுள்ளார்.

Samayam Tamil 13 Jun 2018, 1:32 pm
இளைஞர்களை கவரும் ‘அந்த மாதிரியான’ படங்களை எடுக்கப் போகிறேன் என்று பிரபல இயக்குனர் அசோக் மன வேதனையுடன் கூறியுள்ளார்.
Samayam Tamil ashok


ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகின்றன. அவ்வளவு படங்கள் வெளியானாலும் கைவிட்டு என்னும் அளவுக்கு மட்டுமே படங்கள் ஹிட் ஆகின்றன. அதிலும் சமீபத்தில் வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் சென்ற வருடம் வெளிவந்து பிளாப் ஆன ‘பீச்சாங்கை’ படத்தின் இயக்குனர் அசோக் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். கடந்தவாரம் அவர் வெளியிட்ட ஒரு குறும்படத்திற்கும் மிக மோசமான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. அதனால் எனக்கும் ‘பாப்பா போட்ட தாப்பாள்’, மல்கோவா மாமி’ போன்ற அந்த மாதிரியான படங்களை எடுத்துவிட்டு போகலாமோ என தோன்றுகிறது’’ என மனவேதனையுடன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்