ஆப்நகரம்

என் மீது அவதூறு கூறிய ப்ரீத்திகா மேனன் மீது வழக்கு தொடர்வேன்: தியாகராஜன் ஆவேசம்!

என் மீது பாலியல் குற்றம் சாட்டிய நடிகை ப்ரீத்திகா மேனன் மீது வழக்குத் தொடர்வேன் என்று நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Oct 2018, 2:35 pm
மீடூ விவகாரம் தற்போது இந்தியா முழுவதும் பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது நடிகை ப்ரீத்திகா மேனன், இயக்குநரும், நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான நடிகர் தியாகராஜன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
Samayam Tamil prithika-menon


இதனையடுத்து தியாகராஜன் தரப்பில் இருந்து எந்த விளக்கமுன் வராமல் இருந்தது. இன்று தியாகராஜன் இது பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது:‘‘என் மீது குற்றம் சாட்டிய நடிகை ப்ரீத்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்’’ என்று கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு தியாகராஜனின் மகனும் நடிகருமான பிரசாந்த் வரதட்சனை வழக்கில் நீதிமன்றத்திற்கு சென்று தன் மனைவி கிரஹலட்சுமியிடம் இருந்து விவாகரத்து பெற்றது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்