ஆப்நகரம்

நான் மாடலிங் தொழில் செய்து பொழச்சுக்குவேன்: ஜனனி ஐயர்!

சினிமா வாய்ப்பு இல்லையென்றால் நான் மாடலிங் தொழில் செய்து வாழ்ந்து கொள்வேன் என்று நடிகை ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Mar 2018, 2:43 pm
சினிமா வாய்ப்பு இல்லையென்றால் நான் மாடலிங் தொழில் செய்து வாழ்ந்து கொள்வேன் என்று நடிகை ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil janani


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். தமிழில் திரு திரு திரு திரு, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் முதல் நடித்திருந்தார். ஆனால், இந்த இரு படங்களுமே, இவரது கதாபாத்திரத்தை எடுத்துக்கூறாத படமாக இருந்தது. இந்த நிலையில், பாலா இயக்கத்தில் வந்த அவன் இவன் இவருக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசம் தொலைக்காட்சி என்ற ஒரேயொரு படம் மட்டும் உள்ளது. இதனால், அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. ஆனால், நடிகையாக வருவதற்கு முன்னர், மாடலிங் துறையில் இருந்தார். 150க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்பு குறைந்துள்ளதால் மீண்டும் தனது மாடலிங் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அண்மையில், சென்னையில் நடந்த மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனக்கு சினிமா வாய்ப்பு இல்லையென்றாலும் கூட மாடலிங் துறையில் கலக்குவேன் என்று கூறுகிறார் ஜனனி ஐயர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்