ஆப்நகரம்

Gaja Cyclone: இசை கச்சேரி மூலம் அடுத்த மாதம் நிதி கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்த மாதம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்த மாதம் நிதி அளிக்க இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Nov 2018, 6:16 am
இந்த மாதம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்த மாதம் நிதி அளிக்க இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Samayam Tamil AR


கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக, நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் பங்கிற்கு நிதியுதவி அளிக்கயிருப்பதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வரும் டிசம்பர் 24ம் தேதி கனடாவில் உள்ள டொரோண்டோவில் நடக்கவுள்ள இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும் என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GAJA CYCLONE: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பிரபலங்களின் பட்டியல்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்