ஆப்நகரம்

பணத்துக்காக எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்வதில்லை: ரம்யா நம்பீசன்!

பணத்துக்காக வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

TNN 13 Nov 2017, 1:58 pm
பணத்துக்காக வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i wont accept all movie oppernituty says remya nambeesan
பணத்துக்காக எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்வதில்லை: ரம்யா நம்பீசன்!


நடிகை ரம்யா நம்பீசன் தமிழுக்கு நீண்ட இடைவெளி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்யா’ என்ற படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இதற்கு முன் இவர், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘சேதுபதி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.

தமிழில் ‘இவ்வளவு இடைவெளி ஏன்?’ என்று ரம்யா நம்பீசனிடம் கேட்டதற்கு, “தமிழைத் தவிர மற்ற மொழி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். அதனால்தான், தமிழில் தொடர்ச்சியாக நடிக்க முடியவில்லை. அத்துடன், தமிழில் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.பணத்துக்காக வருகிற எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்