ஆப்நகரம்

அஜித்துடன் நடிப்பதற்கு காரணம் சுசீந்திரன் - சூரி நெகிழ்ச்சி

படப்பிடிப்பில் அஜீத்தை நான் கலாய்த்தபோது அதை பொருட்படுத்தாமல் என்னுடைய நடிப்பைப் அவர் பாராட்டினார் என்று காமெடி நடிகர் சூரி கூறியுள்ளார்.

TNN 10 Aug 2017, 2:35 pm
படப்பிடிப்பில் அஜீத்தை நான் கலாய்த்தபோது அதை பொருட்படுத்தாமல் என்னுடைய நடிப்பைப் அவர் பாராட்டினார் என்று காமெடி நடிகர் சூரி கூறியுள்ளார்.
Samayam Tamil i wont forget director suseendran says soori
அஜித்துடன் நடிப்பதற்கு காரணம் சுசீந்திரன் - சூரி நெகிழ்ச்சி


நடிகர் சூரி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘‘நான் இந்த நிலைமைக்கு வர எந்தளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்பதையும், முதல் படத்திலேயே அஜீத்தை கலாய்த்தது குறித்தும் மனம் திறந்து பேசினார். லிங்குசாமி இயக்கத்தில் ‘ஜி’ படத்தில் அஜீத் நடித்தார்.
அந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரியும் நடித்துள்ளார். ஆனால் படத்தில் இரண்டு காட்சிகளில் தான் நடித்துள்ளார். அந்த படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார் சூரி. படப்பிடிப்பில் ஒரு காட்சியின்போது அஜீத்தை சூரி கலாய்த்ததாகவும் கூறினார்.

ஒரு பெரிய ஹீரோவான அஜீத் தன்னை கலாய்த்ததை சாதாரண எடுத்து கொண்டு தன்னுடைய நடிப்பை பாராட்டினார். மேலும் இயக்குனர் லிங்குசாமி ‘நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று அப்போதே என்னை வாழ்த்தினார். மேலும் சினிமாவில் தற்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது சுசீந்திரன் கொடுத்த புரோட்டா சீன்தான். அவரை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்