ஆப்நகரம்

நிச்சயமாக அந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளமாட்டேன்: நடிகை கஸ்தூரி!

பிக்பாஸ் சீசன் 2வுக்கு அழைப்பு வந்தாலும், அந்த நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொள்ளமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

Samayam Tamil 9 May 2018, 3:41 pm
பிக்பாஸ் சீசன் 2வுக்கு அழைப்பு வந்தாலும், அந்த நிகழ்ச்சியில் நிச்சயமாக கலந்து கொள்ளமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Samayam Tamil biggboss-2


பிக்பாஸ் சீசன் 2வுக்காக படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதல் சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இதையும் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் பல நடிகை, நடிகர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது. அந்த பட்டியலில் நடிகை கஸ்தூரி பெயரும் உள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி கூறுகையில், ‘‘எனக்கு பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ள இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.அப்படியே வந்தாலும், அதில் நிச்சயமாக நான் கலந்து கொள்ளமாட்டேன். காரணம், எனக்கு குழந்தைகள்தான் முக்கியம். அவர்களை கவனிப்பதில் என்னுடைய முழு பங்கும் உள்ளது.’’ என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி. இவரது அதிரடி பேச்சு, அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்