ஆப்நகரம்

நான் நல்ல படம் கொடுக்கவில்லையெனில் என்னை தார் தாரா கிழிங்க: மிஷ்கின்

நான் நல்ல படம் கொடுக்கவில்லையென்றால் என்னை நார் நாராக கிழியுங்கள் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

SamayamTamil 19 Feb 2018, 6:03 pm
நான் நல்ல படம் கொடுக்கவில்லையென்றால் என்னை நார் நாராக கிழியுங்கள் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil if i dont take a good movie please ask a question about movie says director mysskin
நான் நல்ல படம் கொடுக்கவில்லையெனில் என்னை தார் தாரா கிழிங்க: மிஷ்கின்


ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் வெளியான படம் தான் சவரக்கத்தி. ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், தமிழ் சினிமாவில் அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளான இயக்குனர் நான். அதற்கு நான் தான் காரணமும் கூட. நான் இயக்கும் படங்களில் வன்மம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.



அன்பை போதிக்க வேண்டும் என்றால், வன்மம் இருக்கத்தான் செய்யும். இவ்வளவு ஏன், நான் தினமும் போதிக்கும் பைபிள், மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றில் கூட வன்மம் இருக்கத்தான் செய்கிறது. இவை எல்லாமே போதிப்பது அன்பு ஒன்றை மட்டும் தான். பூர்ணாவை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை.

அவருக்காக ஒரு நல்ல கதைகள் எழுதி இயக்கவும் நினைத்திருக்கிறேன். ராம் பற்றி நினைக்கும் போதே எனது கண்ணில் நீர் வருகிறது. இப்படத்தில் நடித்த அவருக்கு நான் சம்பளப் பாக்கி வைத்திருக்கிறேன். ஆனால், ஒரு கூட சம்பள பாக்கியை கேட்டதில்லை. வெற்றி, தோல்விக்காக மட்டும் நான் ஒவ்வொரு படத்தையும் எடுப்பதில்லை. என்னுடைய ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்று தான் நான், நினைப்பேன்.



மேலும், என்னுடைய படத்தின் மூலம் மக்களின் ரசனைகளை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ந்து நான் நல்ல படங்களைத் தான் எடுப்பேன். அப்படி நான் நல்ல படங்களை எடுக்கவில்லை என்றால், என்னை நார் நாராக கிழியுங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்