ஆப்நகரம்

கமல்சார் சொன்னா தேர்தலில் நிற்பேன்: பாடகர் சினேகன்!

கமல் சார் தேர்தலில் நிற்கச் சொன்னால் கண்டிப்பாக நிற்பேன் என்று பாடகரும், பிக்பாஸ் புகழ் சினேகன் கூறியுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 5:27 pm
கமல் சார் தேர்தலில் நிற்கச் சொன்னால் கண்டிப்பாக நிற்பேன் என்று பாடகரும், பிக்பாஸ் புகழ் சினேகன் கூறியுள்ளார்.
Samayam Tamil snehan-kamal


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் கவிஞர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவர். தற்போது அவர் சில படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். அத்துடன் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் அரசியல் கட்சியை தொடங்கியபோது கவிஞர் சினேகனும் கலந்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் கவிஞர் சினேகன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்.. அவரிடம் உங்கள் தொகுதிக்காக நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, ‘‘கமல் சார் சொன்னால் நான் நிற்க ரெடி., கண்டிப்பாக நிற்பேன். அப்படி இல்லாவிட்டாலும் சாதாரண தொண்டனாகவும் அவருடன் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்வேன் கமல் சாரின் கொள்கைகள் எனக்கு பிடித்திருக்கிறது’’ என்றார் சினேகன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்