ஆப்நகரம்

‘அருவி’ படத்தில் இவர்களில் ஒருவர் நடித்திருந்தால் படத்தின் ரிசல்டே மாறியிருக்கும்!

நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் மூவரில் ஒருவர் ‘அருவி’யில் நடித்திருந்தால் படத்தின் ரிசல்டே மாறியிருக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர்.

TNN 18 Dec 2017, 3:37 pm
நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் மூவரில் ஒருவர் ‘அருவி’யில் நடித்திருந்தால் படத்தின் ரிசல்டே மாறியிருக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர்.
Samayam Tamil if one of these three stars in the film arvai the film will be changed
‘அருவி’ படத்தில் இவர்களில் ஒருவர் நடித்திருந்தால் படத்தின் ரிசல்டே மாறியிருக்கும்!


தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு படம் வெளியாகியுள்ளதென்றால் அது ‘அருவி’ படம்தான். இந்தப் படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை இந்த படத்திற்கு யாரும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தில் அதிதி பாலன் நடித்த ‘அருவி’ கேரக்டரில் நடிக்க முதலில் நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூன்று முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டாராம் படத்தின் இயக்குனர். ஆனால் மூவருமே இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாலும், கால்ஷீட் பிரச்சனையினால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கடைசி அரை மணி நேரக்காட்சிக்காக மெலிந்த உடல் தோற்றத்திற்காக மாறவும் மேற்கண்ட மூன்று நடிகைகளும் யோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த மூவரில் ஒருவர் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்த படத்தின் ரிசல்ட்டே வேற லெவல் போயிருக்கும் என்று படக்குழு கூறி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்