ஆப்நகரம்

ராஜமௌலி, ரஜினிகாந்த் சேர்ந்தால் ’அவதார்’ ரெக்கார்ட் எல்லாம் தூசு: கொண்டாடும் அல்போன்ஸ் புத்திரன்

இயக்குநர் ராஜமௌலி, ரஜினிகாந்த் ஒன்றிணைந்து படம் எடுத்தால், அவதார் படத்தின் சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படும் என்று அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

TNN 1 May 2017, 2:56 pm
சென்னை: இயக்குநர் ராஜமௌலி, ரஜினிகாந்த் ஒன்றிணைந்து படம் எடுத்தால், அவதார் படத்தின் சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்படும் என்று அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil if s s rajamouli rajinikanth movie happens it makes avatar record will be second says alphonse
ராஜமௌலி, ரஜினிகாந்த் சேர்ந்தால் ’அவதார்’ ரெக்கார்ட் எல்லாம் தூசு: கொண்டாடும் அல்போன்ஸ் புத்திரன்


ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, அதன் 2ஆம் பாகம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாகுபலி 2ஆம் பாகம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.120 கோடியை தாண்டியது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாகுபலி 2ஆம் பாகத்தை ஏராளமான திரை நட்சத்திரங்கள் திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். அவர்கள் பாகுபலி படக்குழுவினர் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ராஜமௌலி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், இயக்குநர் ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு படம் எடுத்தால், அது ஹாலிவுட்டின் அவதார் பட சாதனையை முறியடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதனை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

If S.S. Rajamouli, Rajinikanth movie happens, it makes Avatar record will be second says Alphonse puthran.

அடுத்த செய்தி

டிரெண்டிங்