ஆப்நகரம்

கதையை மாற்றினால் கணவருடன் நடிக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய்!

படத்தின் கதையை மாற்றினால் நான் என் கணவருடன் இணைந்து நடிக்கிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

TNN 24 Jun 2017, 6:41 pm
படத்தின் கதையை மாற்றினால் நான் என் கணவருடன் இணைந்து நடிக்கிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
Samayam Tamil if story will change then i will act with my hubby
கதையை மாற்றினால் கணவருடன் நடிக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராய்!


நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து ‘குச் நா கஹோ’, ‘குரு’ மற்றும் ‘சர்க்கார் ராஜ்3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் அனுராக் கஷ்யப், ஐஸ்வர்யாவும், அபிஷேக்கையும் இணைத்து ஒரு படம் தயாரிக்க நினைத்தார்.

அனுராக் கஷ்யப் தயாரிக்கும் பாலிவுட் படம் ‘குலாப் ஜாமூன்’. அந்த படத்தில் ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டனர். ‘குலாப் ஜாமூன்’ படக் கதையை கேட்ட ஐஸ்வர்யா, கதையில் தனது கேரக்டர் பிடிக்கவில்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். கதையை மாற்றினால் நடிக்கிறேன். அதுவும் பிடித்திருந்தால் நடிக்கின்றேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

ஐஸ்வர்யா படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதனால் தான் கணவரின் படமாக இருந்தாலும் கூட நடிக்க முடியாது என்று தைரியமாக கூறியுள்ளார். தற்போது அனில் கபூர் இயக்கத்தில் ‘பேனி கான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

If story will change then I will act with my hubby.

அடுத்த செய்தி

டிரெண்டிங்