ஆப்நகரம்

மேல்முறையீட்டை சட்டப்படி சந்திப்பேன்: கஸ்தூரி ராஜா!

வாரிசு பிரச்னையின் மேல்முறையீட்டை சட்டப்படி சந்திப்பேன் என்று தனுஷின் அப்பாவும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

TOI Contributor 24 Apr 2017, 1:41 pm
வாரிசு பிரச்னையின் மேல்முறையீட்டை சட்டப்படி சந்திப்பேன் என்று தனுஷின் அப்பாவும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
Samayam Tamil if they go for appeal i will face that says dhanushs father kasturi raja
மேல்முறையீட்டை சட்டப்படி சந்திப்பேன்: கஸ்தூரி ராஜா!


நடிகர் தனுஷ்க்கு தொடர்ந்து பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் சந்தித்தாலும் படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மதுரை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மாயமாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டதால் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானவை. எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கின் கீழ் மேலூர் தம்பதியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு தொடர்ந்த தம்பதிகள் மேல் முறையீடு செய்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறுகையில், ‘’இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட ஒன்று. 2002 இல் காணாமல் போனார் என்கிறார்கள். அப்படியெனில் எப்படி அதே ஆண்டில் திரைப்படத்தில் நடித்து இருக்க முடியும். அவர்கள் மேல் முறையீடு செய்தாலும் சட்டப்படி சந்திப்பேன், எதிர்கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

If they go for appeal; I will face that says Dhanush’s father Kasturi Raja!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்