ஆப்நகரம்

SPB மீண்டும் காணும் வரம் கிடைக்குமா?: எஸ்.பி.பி.க்காக இளையராஜாவின் மௌன அஞ்சலி

தன் நண்பன் எஸ்.பி. பாலசுப்பிரமணயத்திற்காக இளையராஜா பாடிய பாடல் பலரையும் கலங்க வைத்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 8:51 am
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் மாரடைப்பால் உயிர் இழந்தார். சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி.யின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
Samayam Tamil spb


அதன் பிறகு அவரின் உடல் தாமைரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறந்த செய்தி அறிந்த இசைஞானி இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். அவர் எஸ்.பி.பி. பற்றி உருக்கமாக பேசிய வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில் இளையராஜா கூறியதாவது,

உலகம் ஒரு சூனியமாப் போச்சு, பேச்சு வரல பாலு: இளையராஜா உருக்கம்

சீக்கிரம் எழுந்து வா, உன்னைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று நான் சொன்னேன். கேட்கல, நீ கேட்கல. போயிட்ட, எங்க போன?. கந்தர்வர்களுக்காக பாடுவதற்காக போயிட்டியா?. இங்கே உலகம் ஒரு சூனியமாப் போச்சு. உலகத்தில் ஒன்னும் எனக்கு தெரியல. பேசுறதுக்கு பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவு இல்ல என்றார்.

இந்நிலையில் தன் நீண்ட கால நண்பன் பாலுவுக்காக இளையராஜா பாடல் ஒன்றை பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த பாடலை எடுத்து எஸ்.பி.பி., இளையராஜா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்களை சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஜான் மகேந்திரன்.


அந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தை இழந்து இளையராஜா படும் வேதனையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்