ஆப்நகரம்

எனக்கு ரூ.7 கோடியை விட... 7 ரூபாய் ரொம்ப அதிகம்! - இளையராஜா!!

இப்போது நான் வாங்கும் ரூ. 7 கோடி சம்பளத்தை விட, அப்போது நான் வாங்கிய 7 ரூபாய் சம்பளம்தான் எனக்கு பெரிதாக தெரிந்தது என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Dec 2018, 4:21 pm
சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் இசைஞானி இளையராஜா தான்.
Samayam Tamil ilayaraja


அந்த அளவுக்கு இளசு முதல் பெருசு வரை மனதை மயக்கும் பல மயக்கும் பாடல்களை கொடுத்துள்ளார் அவர். இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் இளையராஜா ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, ‘‘வறுமையின் காரணமாக 8ம் வகுப்பிற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. பிறகு வேலைக்கு சென்றேன். அப்போது வைகை அணை கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அணை கட்டும் இன்ஜினியர் என்னை அவருடைய சிப்பாந்தியாக சேர்த்துக்கொண்டார்.

வேலைக்கு சேர்ந்து நான் சம்பாதித்த முதல் மாத சம்பளம் ஏழு ரூபாய் புத்தம் புதிய நோட்டை கையில் வாங்கியதும் ஏற்பட்ட மகிழ்ச்சி, ஏழு கோடி ரூபாய் சம்பாதித்தபோது கிடைக்கவில்லை. சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை, அவரவரின் மனதில் தான் உள்ளது” என்றார் இளையராஜா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்