ஆப்நகரம்

அச்சச்சோ... இலியானாவுக்கு இது மாறி ஒரு வியாதி இருக்கா? சோகத்தில் ரசிகர்கள்

தனக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக நடிகை இலியானா கூறியது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2019, 11:13 am
தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இலியானா. அதைத்தொடர்ந்து பெரிதாகப் பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மீண்டும் தமிழில் நண்பன் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இவர் சமீபகாலமாகப் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
Samayam Tamil iiena


இது ஒரு பக்கம் இருக்க இவர் நீண்ட நாட்களாகத் தனது காதலர் ஆண்ட்ரு நீபோன் என்பவரை டேட் செய்து வந்தார். திடீரென சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இதைக் கண்ட நெட்டிசன்கள் அவர் காதல் தோல்வியில் மனழுத்ததில் உள்ளார் என்று எல்லாம் கலாய்த்துத் தள்ளினர்.

அவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் தற்போது அவர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், 'எனக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் தினமும் நான் காலையில் எழும் போது எப்படி எனது காலில் காயங்கள் இருக்கும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவைக் கண்ட அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், 'அச்சச்சோ இலியானாவுக்கு இது போன்று ஒரு வியாதி இருக்கிறதா? என்று புலம்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்