ஆப்நகரம்

என்ன சுந்தர் சி., இதுக்கு போய் இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா?

சங்கமித்ரா ரிலீஸான பிறகு படங்களை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக சுந்தர் சி. தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Dec 2019, 4:06 pm
இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமான சுந்தர் சி. சுபயோக சுபதினம் ஒன்றில் ஹீரோ ஆனார். அவர் துரை இயக்கத்தில் ஹீரோவாக நடித்த இருட்டு படம் கடந்த வாரம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 3.8 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அது பற்றி நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Samayam Tamil sundar c


சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் வெளியாகி ஓடாத நிலையில் இருட்டு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுந்தர் சி. சங்கமித்ரா என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தாரே தவிர அது இன்னும் செயல் வடிவம் பெற்று ரிலீஸான பாடில்லை.

அட்ராசக்க, அட்ராச்க: பொங்கலை அடுத்து தீபாவளிக்கு மோதும் அஜித், ரஜினி

முதலில் அந்த படத்தில் ஸ்ருதி ஹாஸன் இளவரசியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். பின்னர் அவர் படத்தில் இருந்து வெளியேற பாலிவுட் நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சங்கமித்ரா குறித்து சுந்தர் சி. பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Ajith அஜித்தை பற்றி தெரிஞ்சும் ரஜினி அப்படி செய்ய மாட்டார்

நான் கடந்த 2 ஆண்டுகளாக சங்கமித்ரா படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். அந்த படம் வெளியான பிறகு நான் இயக்கத்தை நிறுத்த முடிவு செய்துள்ளேன். சங்கமித்ராவால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த படத்திற்கு செலவிடும் நேரத்தில் நான் 10, 15 படங்கள் எடுத்துவிடுவேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்