ஆப்நகரம்

கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா

கள்ளக்காதல் தவறு இல்லை என்பதை சொல்ல 2கே அழகானது காதல் படம் எடுக்கிறீர்களா என்கிற கேள்வி எழுந்த உடன் வனிதா விஜயகுமார் லைட்டா கடுப்பாகி பதில் அளித்தார்.

Samayam Tamil 28 Feb 2021, 4:33 pm
2கே அழகானது காதல் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாகும் ஹரி நாடார் தான் அணிந்திருந்த நகைகள் போதவில்லை என்று அரை கிலோவுக்கு ஒரு சங்கிலி வாங்கியிருக்கிறாராம்.
Samayam Tamil illicit relationship question irks vanitha vijayakumar
கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா


ஹரி நாடார்

யார், யாரோ ஹீரோவாகிறார்கள், நான் ஆனால் என்னவென்று களத்தில் குதித்துவிட்டார் ஹரி நாடார். அவரின் பெயரை சொன்னாலே கிலோ கணக்கில் அவர் தங்க நகைகள் அணிந்திருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கை, கழுத்தில் 3.5 கிலோ தங்க நகைகளுடன் வலம் வந்த ஹரி நாடார் ஹீரோவாக முடிவு செய்த கையோடு அரை கிலோ தங்க சங்கிலி வாங்கி அணிந்திருக்கிறார். ஏதோ அரிசி, பருப்பு வாங்குவது போன்று ஹரி நாடார் கிலோ கணக்கில் செயின், பிரேஸ்லெட் வாங்குவதை பார்த்து பெருமூச்சு விடும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

நகைகள்

நாட்டுல கொள்ளை, திருட்டு எல்லாம் நடக்கிறதாம். ஆனால் இந்த ஹரி நாடார் மட்டும் நடமாடும் தங்க நகைக்கடை போன்று தைரியமாக சுற்றுகிறாரே என்று பேசாதவர்கள் இல்லை. ஹரி நாடாரை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்கும் அந்த புண்ணியவான் யாருய்யா என்று பலரும் கேட்கிறார்கள். அந்த புண்ணியவான் வேறு யாருமில்லை ஹரி நாடாரே தான். ஆமாம், அவரே தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார். 2கே அழகானது காதல் என்கிற அந்த படத்தில் ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

வனிதா

முத்தமிழ் வர்மா சொன்ன கதை பிடித்துப் போனதால் ஹரி நாடார் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக வனிதா தெரிவித்துள்ளார். இது கள்ளக்காதல் தவறு இல்லை என்பதை சொல்ல எடுக்கும் படமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியால் லைட்டா கடுப்பான வனிதா, உங்களை எல்லாம் எங்கிருந்து புடுச்சிட்டு வந்தாங்க என்று சிரித்தபடியே கூறினார். 2கே அழகானது காதல் பட பூஜையில் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கலந்து கொண்டார். யாருப்பா தயாரிப்பாளர்னு நினைச்சு வந்தேன், இவரை பார்த்த பிறகு ஒரு படம் இல்லை தாராளமாக இரண்டு படம் எடுக்கலாம். சிலருக்கு வீட்டில் வசதி இருக்கும், சிலருக்கு பேங்கில் வசதி இருக்கும், இவர் உடம்பிலேயே வசதி வைத்திருக்கிறார் என்று கூறி சிரித்தார் சௌத்ரி.

காதல்

சாதி பிரச்சனை வராமல் காதலிக்க படம் எடுக்கிறார்களாம். கே.ஜி.எஃப். ஹீரோ யஷ் ஸ்டைலில் புல்லட்டில் வந்தார் ஹரி நாடார். பல பெண்களை பொறாமைப்பட வைத்த அவரை கோலிவுட்காரர்கள் நகைகளை பிடுங்கிக் கொண்டு விரட்டாமல் இருந்தால் சரி தான். அரசியல் கூட்டத்திற்கு வேட்டி அணிந்தால் உருவிவிடுவார்கள், சினிமாவில் நகைகள் அணிந்தால் அடகு வைக்க வைத்துவிடுவார்கள். ஹரி நாடார் சூதானமாக இருக்க வேண்டும் என விமர்சனம் எழுந்துள்ளது. ட்விட்டரில் பலரும் ஹரி நாடாரை பற்றி பேசுவதால் அவரின் பெயர் டிரெண்டாகியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்