ஆப்நகரம்

ரசிகர்களுக்கு நான் எப்போதும் கனவு கன்னிதான்: ஹன்சிகா

ரசிகர்கள் மனதில் நான் எப்போதும் கனவு கன்னியாகவே இருக்க விரும்புகிறேன் என்ற நடிகை ஹன்சிகா பேட்டியில் கூறியுள்ளார்.

TNN 27 Apr 2016, 6:28 pm
ரசிகர்கள் மனதில் நான் எப்போதும் கனவு கன்னியாகவே இருக்க விரும்புகிறேன் என்ற நடிகை ஹன்சிகா பேட்டியில் கூறியுள்ளார்.
Samayam Tamil im always be a fans favorite actress says hansika
ரசிகர்களுக்கு நான் எப்போதும் கனவு கன்னிதான்: ஹன்சிகா


அவர் அளித்த பேட்டி வருமாறு: ரசிகர்களிடம் ‘கனவுக்கன்னி’ அந்தஸ்தை பெறுவதுதான் ஒவ்வொரு கதாநாயகியின் கனவாக இருக்கும். அது கிடைக்குமா? என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அது கிடைத்ததை வரமாக கருதுகிறேன். ரசிகர்கள் என்னை, ‘கனவுக்கன்னி’ என்று அழைப்பதில், வருத்தம் இல்லை. விருது நடிகை என்று சொல்வதை விட, ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கனவுக்கன்னியாக இருப்பதில், சந்தோஷம்தான். அதே நேரத்தில், நடிப்புக்காக விருது பெறும் கதாபாத்திரம் வந்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு கதாநாயகியாக நான் என் வேலையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களை திருப்தி செய்யும் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். ‘நம்பர்-1,’ ‘நம்பர்-2’ என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விளையாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. இப்போது இருக்கிற மாதிரி எப்போதும் எனக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தால் போதும். போட்டியாக யாரையும் நினைக்கவில்லை. என்னுடன் மட்டுமே நான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை விட, இன்னொரு படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் இதுவரை 15 ஓவியங்களை வரைந்து இருக்கிறேன். கண்காட்சி நடத்த வேண்டுமானால், 50 ஓவியங்களாவது இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். ஓவியம் வரைய ஆரம்பித்தால் நான் பசி-தூக்கம் மறந்து விடுவேன். ஆறு அல்லது ஏழு மணி நேரம் தொடர்ந்து வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் வெளியே வருவேன்’’ என்றார் ஹன்சிகா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்