ஆப்நகரம்

Seenu Ramasamy: விஜய் சேதுபதிக்கு எதிராக ட்வீட்டினேன் என மிரட்டுகிறார்கள்: சீனு ராமசாமி

800 படம் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு என்னை மிரட்டுகிறார்கள் என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2020, 2:56 pm
இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழின துரோகியின் முகமாகிவிட வேண்டாம் என்று திரையுலகை சேர்ந்தவர்களே விஜய் சேதுபதியிடம் தெரிவித்தார்கள்.
Samayam Tamil seenu ramasamy


இந்நிலையில் 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று இயக்குநர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்து ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்ததாவது,

விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள் இதயம். விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா...நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா. நமக்கெதற்கு மாத்தையா?மாற்றய்யா? என்று தெரிவித்திருந்தார். பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார்.

என் உயிருக்கு ஆபத்து, உதவுங்க முதல்வரே, அவசரம்: விஜய் சேதுபதி பட இயக்குநர்

இந்நிலையில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி முதல்வரிடம் ட்விட்டரில் முறையிட்டார் சீனு ராமசாமி. அதை பார்த்த ரசிகர்கள், என்னாச்சு என்று பதறிப் போய் கேட்டனர்.

தன் ட்வீட் பற்றி சீனு ராமசாமி பேட்டியில் கூறியிருப்பதாவது,

800 படம் பற்றி என் கருத்தை தெரிவித்தேன். இந்நிலையில் நான் விஜய் சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்தேன் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. சொல்ல முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்றார்.

விஜய் சேதுபதிக்கு எதிராக ட்வீட்டியதாகக் கூறி யார் மிரட்டுகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று பலரும் தெரிவித்தனர். இதை பார்த்த முத்தையா முரளிதரன் தன் படத்தில் இருந்து விலகிவிடுமாறு விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை விஜய் சேதுபதி ட்விட்டரில் போஸ்ட் செய்து நன்றி, வணக்கம் என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

அதை பார்த்தவர்கள், அது என்ன மொட்டையா நன்றி, வணக்கம் என்று சொல்கிறீர்கள். படத்தில் இருந்து விலகுகிறீர்களா, இல்லையா என்று கேட்டனர். நன்றி, வணக்கம் என்றால் அது முடிந்துவிட்டது, பேச ஒன்றும் இல்லை என்று அர்த்தம் என பின்னர் தெரிவித்தார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்