ஆப்நகரம்

ஆதரவற்றவர்களுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுத்த இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து அதை ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருவது குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

Samayam Tamil 26 Apr 2020, 8:42 am
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பலருக்கு தன்னார்வலர்களும், சில நடிகர்களும் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சியும் களத்தில் இறங்கியுள்ளார்.
Samayam Tamil imman annachi


அண்ணாச்சி தானே பிரியாணி செய்து அதை பொட்டலம் போட்டு ஆதரவற்றவர்களுக்கு வழங்கியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. அண்ணாச்சி பெரிய அண்டாவில் பிரியாணியை கிளறியபோது எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது அந்த பகுதியில் 10 பேர் தான் உள்ளனர். அதுவும் உணவு இல்லாமல் பசியால் வாடுகிறார்கள். எனவே நான் அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கிறேன் என அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

இணைந்த கைகள் அறக்கட்டளை மற்றும் கலாம் அறக்கட்டளை ஆகியவை சேர்ந்து துவங்கிய ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் இமான் அண்ணாச்சியும் சேர்ந்துள்ளார்.

இமான் அண்ணாச்சியின் இந்த செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இமான் அண்ணாச்சி உணவு கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

லாக்டவுனுக்குள் இன்னொரு லாக்டவுன்! இது மோசமான ஐடியா: நடிகை வரலக்ஷ்மி காட்டம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்