ஆப்நகரம்

வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நடிகர் வடிவேலுக்கு, தயாரிப்பாளர் சங்கம் ரூ.9 கோடி அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 4:04 pm
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நடிகர் வடிவேலுக்கு, தயாரிப்பாளர் சங்கம் ரூ.9 கோடி அபராதம் விதித்துள்ளது.
Samayam Tamil வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!
வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!


நடிகர் வடிவேலின் நடிப்பில், சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை, இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தைத் தயாரிக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. முதல் பாதத்தை தயாரித்த ஷங்கரே இந்தப் படத்தையும் தயாரித்தார்.

இதனிடையே, படக்குழுவுக்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நடிகர் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்தார். இதனால், படக்குழுவினர் நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர்.

அப்போது, நடிகர் வடிவேலு நிபந்தனை எதுவுமின்றி, படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது சம்பளம் மற்றும் இதுவரை ஆன என ரூ.9 கோடியை படக்குழுவுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்றக்கொள்ளாததால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்