ஆப்நகரம்

நின்று போன ‘இம்சை அரசன்’ மீண்டும் தொடங்குகிறது!

சென்னை: வடிவேலுவால் நின்று போன ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் மீண்டும் தொடங்கவுள்ளது.

Samayam Tamil 22 Nov 2018, 3:01 pm
சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் ஹீரோவாக நடித்து 2006-ல் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். பின்னர் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார் ஷங்கர். இதிலும் வடிவேலுவையே ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்தப் படத்தையும் சிம்புதேவன் இயக்கவிருந்தார்.
Samayam Tamil Vadivelu.


இந்தப் படத்திற்காக சென்னையில் பெரிய செட்டுகள் அமைக்கப்பட்டன. துணை நடிகர், நடிகைகள் ஏராளமானோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் திடீரென வடிவேலு படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்தார். இதனால் அனைத்து பணிகளும் ஸ்தம்பித்தது. தயாரிப்பு தரப்பில் இருந்து வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஏனோ வடிவேலு, படப்பிடிப்புக்கு வர முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். ஆனால் தற்போது நடிகர் வடிவேலு தனது பிடிவாதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார்.

நீண்ட நாட்களாக மதுரையில் தங்கியிருந்த நடிகர் வடிவேலு, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்திற்காக தற்போது சென்னைக்கு வருகிறார். இந்தப் படம் அடுத்த தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்