ஆப்நகரம்

பாடகர்கள் துன்பத்தில் தவிக்கின்றனர் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்

தற்போதுள்ள புகழ் பெற்ற பாடகர்கள் கூட துன்பத்தில் இருப்பதாக பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பேசியுள்ளார்.

Samayam Tamil 16 Apr 2018, 6:37 pm
சென்னை : தற்போதுள்ள புகழ் பெற்ற பாடகர்கள் கூட துன்பத்தில் இருப்பதாக பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பேசியுள்ளார்.
Samayam Tamil SPB


பாடகர்களுக்கு ராயல்டி பெற்றுத் தருவதற்காக இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் (இஸ்ரா) அமைப்பு செயல்பட்டு வருகின்றது. சிங்கர்களுக்கு ரைட்ஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அதில் பேசிய எஸ்.பி.பி, “இந்தாண்டு 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பாடகர்களுக்கான ராயல்டி தொகை வசூலித்து உரியவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

இப்போதெல்லாம் சினிமாவில் யார் எல்லாம் பாடுகிறார்கள் என்று கூட தெரியவில்லை. பாட வந்தவர்களுக்கு அதைத் தவிர வேறு தொழில் தெரிவதில்லை.

பாடகர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையில் 25% மட்டும் வந்துள்ளது. இன்னும் 75% வர வேண்டியுள்ளது. பாடகர்கள் தற்போது கஷ்டத்தில் இருக்கின்றனர். இந்த தொகை அவர்களுக்கு உதவும்.” என தெரிவித்தார்.

ஜேசுதாஸ் பேசும் போது, “ஒரு பாடகர் பாடி முடித்த பின்னர், நீங்கள் நன்றாக பாடினீர்கள் என சொன்னால், அது தான் நிஜமான ராயல்டி என்றாலும், தற்போது பாடலுக்கு ராயல்டி கொடுத்திருப்பது நல்ல விஷயம்.” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்