ஆப்நகரம்

Nayanthara: பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்திய ஐரா: நயன்தாரா இப்போ என்ன சொல்லப்போராரு!

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ஐரா படத்தில் அவருக்கு பார்த்த மாப்பிள்ளை பேசிய வசனத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Mar 2019, 5:28 pm
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ஐரா படத்தில் பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்தியதால் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
Samayam Tamil airaa


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இருக்கும் நயன் தாரா நடிப்பில் கடந்த 28ம் தேதி ஐரா படம் வெளியானது. த்ரில்லர் கதையை மையப்படுத்தி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு இல்லை. முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.33 லட்சம் வரையில் வசூல் செய்துள்ள இப்படம் 2ம் நாள் முடிவில் ரூ.31 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படத்திற்குப் பதிலாக நயன்தாராவால் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது என்றே சொல்லலாம்.

ஆம், இப்படத்தில் வரும் காட்சியில், நயன்தாராவுக்கு திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்ப்பார்கள். அவரை சந்திக்க வைப்பதற்கு நயன்தாராவை அவரது பெற்றோர் வரச்சொல்வார்கள். அதன் பின்னர், நயன்தாராவிற்கும், ஆதிக்கும் (கதைப்படி உண்மையான பெயர் நிஷாந்த் ராமகிருஷ்ணன்) இடையில் உரையாடல் நடக்கும். அப்போது, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம். எனக்கு இதில், ஆர்வம் இல்லை. ஏதோ, தவறுதலாக இப்படியெல்லாம் நடந்துவிட்டது என்று நயன்தாரா கூறுவார்.

இவருக்குப் பதில் தரும் விதமாக, ஆதி, எனக்கும் அப்படி தான். இளைய பருவத்தில் இருந்து 60 வயது வரை வாழ்க்கையை நல்லா ஜாலியாக வாழ வேண்டும். அப்புறம் உனக்கு பிடிக்கவில்லை என்றா, நீ போய்விடு என்று ஆதி கூறுவது போன்று இருக்கும்.

இதோ பாருங்க ஆதி, எனக்கு கல்யாணத்துல ஆர்வம் இல்லை தான். ஆனால், அதுக்காக இப்படியொரு கண்டிஷன் எல்லாம் எனக்கு....

உன்னோட ஃபேஸ்புக் போட்டோ எல்லாம் பார்த்தேன். அதில், உன்னோட வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ, பார்ட்டி என்று ஜாலியா இருப்பதை எல்லாம் பார்த்தேன். இப்படி கல்யாணம் பண்ணாம நீ பண்ணுறத….கல்யாணம் பண்ணிக்கிட்டு பண்ண வேண்டியது தான என்று ஆதி கேட்கிறார்.

இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல், புறப்பட தயாரான, நயன்தாராவிடம், ஏய் நீ மீடியாவில் தான இருக்கிறாய். 4, 5 பேரோட இருக்காமலா இந்த நிலைக்கு வந்திருப்ப என்றெல்லாம் கேட்கிறார்.

இதற்கு, ஆதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நயன் தாரா பேசுறார். இறுதியில், உனக்கு எல்லாம் ஆதி என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக….என்பதோடு, நயன் தாரா அந்த இடத்தை விட்டு புறப்படுகிறார்….இதோடு அந்த உரையாடல் முடிகிறது.

சரி, இது போன்ற ஒரு வசனம் வைத்ததற்கும், அண்மையில், ராதாரவி பேசியதற்கு என்ன வித்தியாசம். அன்று அவர் பேசியது தவறு என்றால், இன்று படத்தில் நயன்தாராவின் உரையாடலும் தவறு தான். இதற்கு நயன்தாரா தரப்பு என்ன பதில் சொல்லப்போகிறது? ஆம், கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது பேசிய ராதாரவி, நயன் தாரா பற்றி தவறான கருத்துக்களை பதிவு செய்திருப்பார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் கைதட்டினார்கள் என்று விமர்சனம் எழுந்தது.

மேலும், பத்திரிக்கையாளர்களால் தான் ராதாரவி போன்ற ஒருவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, நடிகை ஸ்ரீப்ரியா உள்பட பலரும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், தான் நயன் தாரா நடித்த ஐரா படத்திலேயே பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

ஏன், விக்னேஷ் சிவன் அந்த கதையை கேட்கவில்லையா? நயன் தாராவிற்குரிய வசனத்தையும் பார்க்கவில்லை. ஏன், இந்தப் படத்தில் இப்படியொரு வசனம் தேவைதானா? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்