ஆப்நகரம்

Tharshan: தர்ஷனுக்கு லெட்டர் எழுதி கிழித்த ஷெரின்!

நேற்றைய நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினராக வருகை தந்தை யாஷிகா, ஷெரினிடம் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் பற்றி எழுதுங்கள் என்று கூற, ஷெரினோ, தர்ஷனைப் பற்றி வரி வரியாக எழுதியுள்ளார்.

Samayam Tamil 25 Sep 2019, 8:22 am
நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். அவர்களைப் பார்த்த நமது போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பரிசு கொடுக்கச் சொல்ல, அதற்கேற்ப லோஸ்லியாவிற்கு அவரது அப்பாவின் புகைப்படமும், வீட்டில் காதல் மன்னனாக இருக்கும் கவினுக்கு 4 இதங்களும், முகெனுக்கு மைக்கும், சாண்டிக்கு செப் கேப்பும் பரிசாக வழங்கப்பட்டது.
Samayam Tamil Sherin Love


இந்த நிலையில், யாஷிகா, உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள் என்று ஷெரினிடம் தெரிவித்தார். இதற்கு அவரது மனதில் தோன்றிய தர்ஷன் பற்றிதான் எழுதியுள்ளார். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமராவில் நன்றாகவே தெரிந்துள்ளது.

அதன்படி, மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீங்கள்தான் ஒளிரச் செய்கிறீர்கள் என்று எழுதியுள்ளார். எழுதியதை யாருக்கும் காட்டாத நிலையில், பிக் பாஸ் யாஷிகா மற்றும் மகத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினாரோ அதனை அவரிடம் கொடுக்க வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், இது தன்னால் முடியாது என்று கூறி ஷெரின் அந்த லெட்டரை கிழித்து, குப்பைத் தொட்டியில் போடாமல் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டார்.

இதனை எதிர்பாராத தர்ஷன், தனக்குதான் லெட்டர் எழுதிருப்பார் என்று எண்ணி, குப்பைத்தொட்டியில் தேடிப்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், தர்ஷன் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரவு தூங்குவதற்கு முன்பாக மீண்டும் லெட்டர் எழுதி பாதுகாப்பாக வைத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அதனை கொடுத்துவிட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்