ஆப்நகரம்

திண்டுக்கல்லில் பரபரப்பு: சினிமா கலைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல் மாவட்டத்தில் சினிமா கலைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jun 2019, 9:24 am
திண்டுக்கல் மாவட்டம் நேருஜிநகரில் திருச்சி சாலையில் ஒரு ரெயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. நேற்று காலை, மேம்பால கம்பியில் தூக்குப்போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பேண்ட் மட்டுமே அணிந்திருந்து தனது சட்டையால் மேம்பாலத்தின் கம்பியில் கட்டி தூக்கியில் பிணமாக தொங்கியவரது உடலை கயிறு கட்டி மீட்டனர்.
Samayam Tamil din


மேலும், அவரது பேண்ட் பையிலிருந்த செல்போன் மூலம் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணையைத் தொடங்கினர். இதற்கு முன்னதாக, அவர் யாருக்கெல்லாம் போனில் பேசியுள்ளார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தேனியைச் சேர்ந்த போடி ரெங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த கணேசன் (48) என்று தெரியவந்துள்ளது.

இவர், சென்னையில், சினிமா நடிகர்களுக்கு ஒப்பனை செய்யும் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரது மகன் விஜய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதற்காக அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஆனால், வந்தது முதல் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், அவர் நேற்று முன் தினம் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். அங்கு மேம்பாலத்தின் கம்பியில்தனது சட்டையை கழற்றி அதன் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்