ஆப்நகரம்

இனிமேல் தான் சூர்யாவை அந்தமாதிரி பார்ப்பீர்கள்: பந்தோபஸ்த் இயக்குனர்!

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2019, 2:14 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஜாக்பாட படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் சூர்யாவின் காதல் மனைவி ஜோதிகா ஹீரோயினாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படம் காமெடி ஜோனரில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அண்மையில், சூர்யா நடிப்பில் வெளியான படம் என்ஜிகே.
Samayam Tamil fdh


Dear Comrade: அதுக்கு மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன் - ராஷ்மிகா மந்தனா!!

முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு தோல்வி தான் மிஞ்சியது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா இறங்கிய அதிரடி ஆக்‌ஷன் படம் தான் காப்பான். இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

சூர்யா வாழ்வில் மாற்றம் தந்த விஜய் அஜித்!!

தமிழில் காப்பான் என்று உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் பந்தோபஸ்த் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக சூர்யா – கேவி ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இந்த இரு படங்களும் தெலுங்கில் வீடோக்காடே மற்றும் பிரதர்ஸ் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

HBD Suriya: சூர்யா பிறந்த நாள் குவியும் வாழ்த்துகள்!


காப்பான் படம் குறித்து இயக்குனர் கேவி ஆனந்த் கூறுகையில், எப்போது, படப்பிடிப்பில் தனது சொந்த மதிப்புகளை கொண்டிருப்பவர் சூர்யா. படங்களில் பெண்களை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் காட்சிகளில் அவர் நடிக்க விரும்புவதில்லை. படப்பிடிப்பில் தேவையற்ற காதல் காட்சிகள் வந்துவிட்டால், அதனை நீக்கும்படி கூறுவார்.

இப்படத்தில் சூர்யா பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில், வில்லன் கதாபாத்திரமும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்தில், மோகன் லால், சாயிஷா மற்றும் ஆர்யா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்