ஆப்நகரம்

சிறப்பு காட்சி இல்லாததால், கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்!

கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி இல்லாததால், விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 6:37 am
விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் பிகில். ராயப்பன், மைக்கேல், பிகில் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Thalapathy Vijay Bigil Release


பிகில், வேற லெவல்ல வெறித்தனமா இருக்கு- பிளாக்பஸ்டர் ஹிட்டுங்கோ!

இப்படத்திற்கு அம்ஜத் மீரான் மற்றும் செல்வா ஆகியோர் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எனினும், படத்திற்கு தடை விதிக்கவில்லை. இதே போன்று முதலில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்த அரசு, பின்னர், இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. அதுவும், சிறப்பு காட்சி கட்டணத்திற்கு நிபந்தனை விதித்துள்ளது. இதனை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டதுடன் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay: விஜய்யின் பிகில் வெற்றியடைய வாழ்த்து கூறிய பிரபலங்கள்!


இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில திரையரங்குகளில் மட்டும் சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை. இதே நிலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நடந்துள்ளது. இதன் காரணமாக கோபத்தில், இருந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாரின் பேரிங் கார்டை தூக்கி சாலையில் வீசியும், கட்டையால் அடித்தும் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிகிலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

உலகமே பிகில் வருகைக்காக திரையரங்குகளில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. தமிழகம் மட்டுமல்ல, லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரசிகர்கள் பிகில் படத்தைக் காண்பதற்கு இரவு முழுவதும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்