ஆப்நகரம்

பாட்டியுடன் சேர்ந்து 14ஆவது மாடியில் ரூ.16 கோடிக்கு புதிய வீடு வாங்கிய தமன்னா!

மும்பையில், 14ஆவது மாடியில் நடிகை தமன்னா ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2019, 2:13 pm
கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து வியாபாரி படத்தில் நடித்தார். அடுத்ததாக கல்லூரி படம். இப்படி சாதாரண ஹீரோக்களுடன் இணைந்து நடித்த தமன்னாவிற்கு தமிழில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதில், ஒரு சில படங்கள் தமன்னாவிற்கு மாஸ் படங்களாக அமைந்துள்ளது. தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
Samayam Tamil tamannaah


இந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ள அவர், மும்பையில், ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், மும்பையின் வெர்சோவில் சதுர அடி ரூ.80,778க்கு பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். இப்பகுதியில் விற்கப்படும் விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தரகர்களின் கூற்றுப்படி இந்த கட்டிடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வர இருக்கும் புதிய கட்டிடத்திற்கு சதுர அடி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அப்படியிருக்கும் போது தமன்னா 2,055 சதுர அடி பிளாட்டிற்கு ரூ.16 கோடி தமன்னா செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், தோராயமாக அபார்ட்மெண்டின் விலை ரூ.4.56 கோடி. தமன்னாவோ பிளாட் பதிவு செய்ததற்காகவே ரூ.99.60 லட்சம் வரையில் ஸ்டாம்ப் டூட்டியாக செலுத்தியுள்ளார்.

தமன்னா வாங்கிய பிளாட்டானது 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ளது. ஆனால், தமன்னாவோ 14ஆவது மாடியில் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளார். இந்த பிளாட் வசதியுடன் 2 கார் பார்க் பகுதிகளும் கிடைத்துள்ளன. தமன்னா மற்றும் அவரது பாட்டி இருவரும் இணைந்து அந்த புதிய வீட்டை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்